மாணிக்கப் பிள்ளையாரின் ஆலயத்தில்
மகா சக்தியின் மகிமை காணீர்
ஏழாம் நாளில் எடுப்பாய் ஓர் விழா
ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில் கொடியேற்றம் செய்து ஏழாம் நாள் கண்ணன் அத்தினாபுரம் வரல் என்ற நிகழ்ச்சி "சுவாமி எழுந்தருளல்" என்ற பேரேடு எடுப்பாய் நிகழும்.அத்தினாபுர எல்லை எனக் காட்டும் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாண்டவர் வேடம் பூண்டவர்களால்,பல்லக்கில்(தேரினில்)உபசாரங்களால் தூக்கி வருவதும்,அன்றைய நிகழ்வில் ஓர் அம்சமாக திரௌபதி கண்ணனிடம்,தன்னிலை எண்ணிக் கதறுவதாக அழைப்பதான ஓர் நிகழ்வும்,திரெளபதியாக வேடம் பூண்ட விரதகார அன்பருக்கு மந்திர உச்சாடனங்கள் செய்து தெய்வமாட உருவேற்றித் தோத்திரங்கள் செய்து ஆடவைப்பர் உருவாடியபின் உருவாடியவரில் இருக்கும் தெய்வம் வாக்குகொடுப்பர்,இக்காலமே துரியோதன் சபையில் துர்ச்சாதனன் துகில் உரிந்த நிலையில் அந்நிலையில் ஒரு கையால் தன்னை காத்துக் கொண்டுகதறிய திரௌபதி,இரண்டு கைகளையும் நீட்டி பூரணசரணாகதியடைந்ததும்,கண்ணன் வந்ததாக உள்ள ஐதீகத்துக்கு கேட்ப நேரமெடுக்கும்,அதன் பின்னரே உருவேறும்,தெய்வமாடி திருவாக்குக் கொடுப்பார்.



http://vijeyfm.tk
ReplyDelete